ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக சமந்தாவுக்கும், அவரது காதல் கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சினை என டோலிவுட்டிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு தனது மாமனார் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மருமகள் சமந்தாவின் வாழ்த்திற்கு மாமனார் நாகார்ஜுனா இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதனிடையே, தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி என்பவருடன் தெலங்கானா மாநில கிராமப்புறங்களில் சுற்றுலா சென்றுள்ளார். தோழியின் மகனுடன் ஒரு குளம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அவரது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் எந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
இருப்பினும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், டிரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 'டிரோல்கள்' பற்றி ஆடம் கிரான்ட் என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் பகிர்ந்த ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.