பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக சமந்தாவுக்கும், அவரது காதல் கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சினை என டோலிவுட்டிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு தனது மாமனார் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மருமகள் சமந்தாவின் வாழ்த்திற்கு மாமனார் நாகார்ஜுனா இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதனிடையே, தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி என்பவருடன் தெலங்கானா மாநில கிராமப்புறங்களில் சுற்றுலா சென்றுள்ளார். தோழியின் மகனுடன் ஒரு குளம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அவரது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் எந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
இருப்பினும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், டிரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 'டிரோல்கள்' பற்றி ஆடம் கிரான்ட் என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் பகிர்ந்த ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.