தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக சமந்தாவுக்கும், அவரது காதல் கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சினை என டோலிவுட்டிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு தனது மாமனார் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மருமகள் சமந்தாவின் வாழ்த்திற்கு மாமனார் நாகார்ஜுனா இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதனிடையே, தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி என்பவருடன் தெலங்கானா மாநில கிராமப்புறங்களில் சுற்றுலா சென்றுள்ளார். தோழியின் மகனுடன் ஒரு குளம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அவரது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் எந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
இருப்பினும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், டிரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 'டிரோல்கள்' பற்றி ஆடம் கிரான்ட் என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் பகிர்ந்த ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.




