'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிழகத்தில் ஆக., 23 முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை விரைவில் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் பேசி வந்தனர்.
இந்நிலையில் ஆக., 23 முதல் தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேசமயம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஓடிடி பக்கம் சாய்ந்த சில தியாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் முன்பு போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை. மேலும் மக்களும் கொரோனா அச்சத்தை தாண்டி தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். தற்போதைய சூழலில் முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியான ஓரளவுக்கு ரசிகர்களும் வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.