பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் சஞ்சான கல்ராணி. தமிழில் நடிக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. தற்போது ஜாமினில் விடுதலையாகி உள்ள சஞ்சனா கல்ராணி நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சஞ்சனா கல்ராணி தற்போது மலையாளத்தின் பக்கமும் கவனம் செலுத்துகிறார். மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கும் சஞ்சனா கல்ராணி, டாக்டர் பிரவீன் ராணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து சஞ்சனா கூறியிருப்பதாவது: கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. கடந்த ஆண்டு நிறைய கதவுகளை மூடினார். இப்போது நிறைய கதவுகளை திறக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்துவிட்டேன். அதனால் நான் பயந்துவிடவில்லை. முன்பை விட தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். கடவுளிடம் இருந்து எனக்கு நியாய தீர்ப்பு கிடைக்கும். என்கிறார்.