பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. ஏறக்குறைய நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள சினிமா தியேட்டர்களை செப்டம்பர் மாதத்திலாவது திறக்க அனுமதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் எழுந்துள்ளது.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவீத இருக்கைகளுடனும், தெலங்கானாவில் 100 சதவீத இருக்கைகளுடனும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழில் தயாராகியுள்ள பல படங்களின் வேலைகள் முடிந்து தியேட்டர்கள் திறப்பிற்காகக் காத்திருக்கின்றன. மேலும், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகியுள்ள சில பான்-இந்தியா படங்களையும் வெளியிடத் தயாராக உள்ளார்கள். ஆனால், தென்னிந்தியாவிலேயே இன்னும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும், பாலிவுட்டின் முக்கிய வசூல் மாநிலமான மகாராஷ்டிராவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும் பலரும் தங்களது வெளியீட்டைப் பற்றி முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. தமிழகத்தில் கட்டுக்குள்தான் இருக்கிறது. இருந்தாலும் தியேட்டர்களைத் திறந்தால் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் தான் தியேட்டர்களைத் திறக்காமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லையாம். கொரோனாவின் பிடியிலிருந்து மக்கள் முழுவதுமாக மீண்ட பிறகு தான் தியேட்டர்களையும், சினிமா துறையையும் பழையபடி மீட்டெடுக்க முடியும். அதுவரையில் கடும் சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என திரையுலகினர் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.