ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் நான்கு மாத காலமாக தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மற்ற தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் தியேட்டர்களைத் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், “சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெப்ப நிலை பரிசோதனை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் தமிழக அரசுக்கும் வர வேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தியேட்டர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தமிழக அரசு தியேட்டர்களைத் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது.