23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் நான்கு மாத காலமாக தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மற்ற தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் தியேட்டர்களைத் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், “சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெப்ப நிலை பரிசோதனை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் தமிழக அரசுக்கும் வர வேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தியேட்டர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தமிழக அரசு தியேட்டர்களைத் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது.