பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் நான்கு மாத காலமாக தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மற்ற தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் தியேட்டர்களைத் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், “சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெப்ப நிலை பரிசோதனை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் தமிழக அரசுக்கும் வர வேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தியேட்டர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தமிழக அரசு தியேட்டர்களைத் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது.




