'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
தெலுங்கு நடிகர் ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்து தனது புதிய படத்தை அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறார் ஷங்கர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் முடிந்து விட்டதால் மற்ற டெக்னீஷியன்கள், நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராம்சரணைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ததை தானே அறிவித்தார் ஷங்கர். அவரைத் தொடர்ந்து தற்போது அஞ்சலியையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த வந்த அஞ்சலி சமீபத்தில் தான் தன்னை கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் செய்த ராம் இயக்கும் புதிய படத்தில் நிவின்பாலியுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் அந்த இரு மொழிப் படத்தை அடுத்து, இப்போது ஷங்கர் இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.