நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? |
தெலுங்கு நடிகர் ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்து தனது புதிய படத்தை அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறார் ஷங்கர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் முடிந்து விட்டதால் மற்ற டெக்னீஷியன்கள், நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராம்சரணைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ததை தானே அறிவித்தார் ஷங்கர். அவரைத் தொடர்ந்து தற்போது அஞ்சலியையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த வந்த அஞ்சலி சமீபத்தில் தான் தன்னை கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் செய்த ராம் இயக்கும் புதிய படத்தில் நிவின்பாலியுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் அந்த இரு மொழிப் படத்தை அடுத்து, இப்போது ஷங்கர் இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.