கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த 10-ந்தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலத்தில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அப்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு ஐதராபாத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த பிரகாஷ்ராஜ், ஒரு சிறிய எலும்பு முறிவு என்பதை வெளிப்படுத்தினார். இந்தநிலையில் தற்போது தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதோடு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.