தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
கடந்த 10-ந்தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலத்தில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அப்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு ஐதராபாத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த பிரகாஷ்ராஜ், ஒரு சிறிய எலும்பு முறிவு என்பதை வெளிப்படுத்தினார். இந்தநிலையில் தற்போது தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதோடு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.