ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு வேறு படத்தை இயக்க டைரக்டர் ஷங்கர் செல்லக்கூடாது என்று லைகா நிறுவனம் நீதி மன்றத்தில் தடை கோரியது. அதையடுத்து நடந்த விசாரணைக்குப்பிறகு தனி நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன்காரணமாக ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்த தான் இயக்கும் படவேலைகளை தொடங்கிருக்கிறார் ஷங்கர். அதோடு இந்தபடத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்து ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்பு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் இருந்து தனி நீதிபதியின் உத்தரவை நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதிகளின் அமர்வு,லைகாவின் மேல்முறையீட்டு வழக்கின் மனுவில் தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணை நடத்த பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் லைகா நிறுவனத்தின் இந்த மேல்முறையீடு மனு குறித்த வழக்கு விசாரணை வரும் போது அதில் வரும் தீர்ப்பை பொறுத்து ஷங்கரின் பிற மொழி படங்களின் விஷயத்தில் மாற்றம் நிகழலாம்.