‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெய்பீம். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா சற்றே நீண்ட சிறப்பு தோற்றத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்த படம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்த்ரு பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கிறஞராக இருந்தபோது ஒரு மலைவாழ் பெண்ணின் வழக்கை எடுத்து வாதாடி வெற்றி பெற்றார். அந்த வழக்கை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இதில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு பணியாற்றி உள்ளார்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் கதையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே கதை. என்று அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.