பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அம்மன் போல மேக்கப் போட்டு நடிகை ரேகா எடுத்திருக்கும் புதிய போட்டோஷூட் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. பார்ப்பதற்கு ரேகா என அடையாளமே தெரியாத வகையில் அந்த புகைப்படங்கள் உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரேகா பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார், முதல் ஆளாக விரைவிலேயே எலிமினேட் ஆனாலும், ரேகாவிற்கு அந்த நிகழ்ச்சி ஒரு கம்பேக் போலவே அமைந்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கி வரும் ரேகா, சொந்தமாக யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் அம்மன் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அதிலிருப்பது உண்மையான அம்மனின் ஓவியம் போல உள்ளதே தவிர, ரேகாவை பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த புகைப்படம் வந்துள்ளது.
இந்த போட்டோஷூட் குறித்து தனது யூ-டியூபில் பேசியுள்ள ரேகா, அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும், கே.ஆர்.விஜயாவும், நயந்தாராவும் தான் தனது அம்மன் கதாபாத்திரத்திற்கான உத்வேகம் எனவும் அவர் கூறியுள்ளார்.