நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படம் ஓ.டி.டியில் ரிலீசானது. தியேட்டர்களில் வெளியானால் எந்த அளவுக்கு வரவேற்பு பெறுமோ அந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதையும் சுதாவே இயக்குவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்தது
இந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சிக்யா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குநீத் மொங்கா என்பவர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை விற்றதில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்தாலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. மேலும் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக சுமுகமாகப் பேசி இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2டி சார்பில் விளக்கம்
இதுகுறித்து 2டி நிறுவனத்தின் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், ‛‛கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா நிறுவனத்திற்கு பேசியபடி வழங்கப்பட்டுவிட்டது. "கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன'' என்றார்.