ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

கேபிஒய் பாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்திகண்ணாடி'. இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஷெரிப். 'காந்திகண்ணாடி படத்துக்கு பேனர் வைக்க விடவில்லை. எங்களுக்கு தியேட்டர் பிரச்னை. நாங்கள் சினிமா கனவுடன் வந்தவர்கள், எங்களை புறக்கணிக்கிறார்கள். எங்களை துரத்தி அடிக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. எங்களை நேரில் அழைத்து 2 அடி கொடுங்க, இப்படி மறைமுகமாக அடிக்காதீங்க' என்று பொங்கியுள்ளார். இந்த பேச்சு வைரல் ஆகியுள்ளது.
யார் தடுக்கிறார்கள் என இயக்குனர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ஏதோ பிரச்னை என தெரிகிறது. தனது செயல்களால் பாலாவுக்கு நல்ல பெயர். அவர் ஹீரோவாகும் படத்தை தடுப்பது யார்? பேனர் வைக்கவிடாமல் தடைபோடுவது யார்? விரைவில் இது குறித்து பாலா மனம் திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.