மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஒருகாலத்தில் வில்லன் நடிகராக மிரட்டியவர் மலையாள நடிகர் பாபு ஆண்டனி. தற்போது நல்ல நல்ல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பாபு ஆண்டனி.
இந்தநிலையில் மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் 'ப்ரோ-டாடி' படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்த பாபு ஆண்டனி, மோகன்லால் பிரித்விராஜ் இருவருடனும் பழைய நினைவுகள் குறித்து அளவளாவி வந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பாபு ஆண்டனி.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் அடுத்தடுத்த தளங்களில் அருகருகே தான் நடைபெற்று வருகின்றன. தனக்கு இடையே ஒருநாள் சூட்டிங் இல்லாததால் அப்படியே ஜாலியாக மோகன்லால் பட செட்டுக்கு விசிடி அடித்துவிட்டு அருமையான பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்ததாக கூறியுள்ளார் பாபு ஆண்டனி.




