ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்த விஜய், அதற்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நீதிபதியின் விமர்சனத்துக்கு உள்ளானதோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விஜய்க்கு விதிக்கப்பட்டது. பின் மேல்முறையீடு அபராதத்தில் இருந்து இடைக்கால தடை பெற்றார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுசும் 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கிய காருக்கு வணிக வரித்துறை ரூ. 60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரிவிதித்தது. அதையடுத்து அந்த வரியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். அதோடு,50 சதவிகித வரியை செலுத்தினால் காரை பதிவு செய்யவும் வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது வணிக வரித்துத்றை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதியான நாளை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தனுஷின் வழக்கு விசாரணையில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியிருக்கிறது.