ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, கயல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பொறியாளன், பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம், சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, ரூபாய், பண்டிகை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள அலாவுதனின் அற்புத கேமரா, டைட்டானிக், ஏஞ்சல் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் சாக்ரட்டீஸ் என்ற துணை இயக்குனரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஆனந்தி தெலுங்கில் நடித்து வரும் படம் ஸ்ரீதேவி சோடா சென்டர். இதனை சுதீர் பாபு இயக்குகிறார். சூரி பாபு ஹீரோ. இது ஒரு கிராமத்து காதல் கதை. சோடா சென்டர் நடத்தும் ஆனந்தி சோடா போன்றே அடிக்கடி பொங்குகிறவர். அவருக்கும் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் சூரி பாபுக்கும் இடையிலான காதலும், காமெடியும் தான் படம். இந்த படம் தெலுங்கில் தனக்கு விட்ட இடத்தை பிடித்து தரும் என்று நம்புகிறார் ஆனந்தி.