2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் |
தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, கயல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பொறியாளன், பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம், சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, ரூபாய், பண்டிகை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள அலாவுதனின் அற்புத கேமரா, டைட்டானிக், ஏஞ்சல் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் சாக்ரட்டீஸ் என்ற துணை இயக்குனரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஆனந்தி தெலுங்கில் நடித்து வரும் படம் ஸ்ரீதேவி சோடா சென்டர். இதனை சுதீர் பாபு இயக்குகிறார். சூரி பாபு ஹீரோ. இது ஒரு கிராமத்து காதல் கதை. சோடா சென்டர் நடத்தும் ஆனந்தி சோடா போன்றே அடிக்கடி பொங்குகிறவர். அவருக்கும் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் சூரி பாபுக்கும் இடையிலான காதலும், காமெடியும் தான் படம். இந்த படம் தெலுங்கில் தனக்கு விட்ட இடத்தை பிடித்து தரும் என்று நம்புகிறார் ஆனந்தி.