கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களிலும், வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா பார்வை' என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனந்தி இந்த தொடரில் இரண்டாம் கதாநாயகியாக வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடரின் நாயகன் முனாஃப் ரகுமானுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், 'விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
'ராஜ பார்வை' தொடர் தினமும் பிற்பகல் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது




