பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தின் கதையை சஜீவ் பழூர் என்பவர் எழுதியிருந்தார். தற்போது திலீப் அறுபது வயது கிழவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டிண்டே நாதன் என்கிற படத்திற்கும் இவர் தான் கதை எழுதியுள்ளார். மலையாள கதாசிரியர் என்றாலும் தற்போது, இவர் தமிழில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தின் கதையை எழுதிய இவரே, அந்தப்படத்தை இவரே சில நாட்கள் இயக்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியாமான ஒன்று தான்.