நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கில் தற்போது பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்கள் இறுதிக்கட்ட பணிகளை எட்டியிருக்கின்றன. கொரோனா இரண்டாவது அலை ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்தப்படங்கள் தங்களுக்கான ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த வருடம் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்தவகையில் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ஆனால் தற்போது சூழல் வேறு மாதிரியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வசூல் ரீதியாக பாதிப்பு அடைய வேண்டாம் என புஷ்பா படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ்பாபு படத்திற்கு முன்னதாகவே இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.