தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி, குணச்சித்ரம் என ஏராளமான படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தை பிடித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்பில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பதவி வகிக்கிறார். ஆனால் அதுப்பற்றிய விபரம் தற்போது தான் வெளியே வந்துள்ளது.
இவர் கூறுகையில், ‛‛பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
தனது துறையான திரைத்துரையில் சேர வழிகாட்டாமல் நாட்டிற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் சேர ஊக்குவித்த சின்னி ஜெயந்த்திற்கு அவர்கள் பாராட்டுக்குரியவர்.




