பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை பிரபலங்களான மதன் - ரேஷ்மா ஜோடி தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்கள் வேலைக்காக ஏன் காதலை மறைக்க வேண்டும் என கூறினர்.
சின்னத்திரையில் பிரபலமான மதன் - ரேஷ்மா இருவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமாயினர். இவர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் வெளியுலகிற்கு தெரிவித்தனர்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "அபி டெய்லர்" தொடரில் ஜோடியாக நடித்து வரும் இருவரிடமும் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி சொன்னீர்கள்? என்ற கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த மதன் - ரேஷ்மா ஜோடி,வேலைக்காக காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும்?. அதேநேரம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மறைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. என கூறினர்.
மேலும், தங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.