அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
சின்னத்திரை பிரபலங்களான மதன் - ரேஷ்மா ஜோடி தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்கள் வேலைக்காக ஏன் காதலை மறைக்க வேண்டும் என கூறினர்.
சின்னத்திரையில் பிரபலமான மதன் - ரேஷ்மா இருவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமாயினர். இவர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் வெளியுலகிற்கு தெரிவித்தனர்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "அபி டெய்லர்" தொடரில் ஜோடியாக நடித்து வரும் இருவரிடமும் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி சொன்னீர்கள்? என்ற கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த மதன் - ரேஷ்மா ஜோடி,வேலைக்காக காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும்?. அதேநேரம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மறைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. என கூறினர்.
மேலும், தங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.