'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

பாலிவுட் நடிகர் சல்மான்கானை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். அதேசமயம் சில நேரங்களில் தனது செயல்களால் ஆச்சர்யப்பட வைப்பவரும் கூட.. ஆனால் அவரைப்போல வெளிப்படையாக பேசக்கூடிய நபரை பார்ப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.. ஆம் புட்டபொம்மா பாடல் மூலம் பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டேவின் புகழ் பரவவே அதன் பயனாக தற்போது சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பைஜான் படப்பிடிப்பில் சல்மான்கானுடன் பழகிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “சில மனிதர்கள் தங்களுக்கென முகமூடி அணிந்து கொண்டே பழகுவார்கள்.. ஆனால் சல்மான் கான் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என வெளிப்படையாக பேசக்கூடியவர், சிறந்த ஆளுமை கொண்டவர்.. அவர் அவராகவே இருக்கிறார். அவரைப்போல இப்படிப்பட்ட உயரத்தில் இருக்கும் ஒரு மனிதர் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமையான விஷயம்” என புகழ்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.




