நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட் நடிகர் சல்மான்கானை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். அதேசமயம் சில நேரங்களில் தனது செயல்களால் ஆச்சர்யப்பட வைப்பவரும் கூட.. ஆனால் அவரைப்போல வெளிப்படையாக பேசக்கூடிய நபரை பார்ப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.. ஆம் புட்டபொம்மா பாடல் மூலம் பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டேவின் புகழ் பரவவே அதன் பயனாக தற்போது சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பைஜான் படப்பிடிப்பில் சல்மான்கானுடன் பழகிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “சில மனிதர்கள் தங்களுக்கென முகமூடி அணிந்து கொண்டே பழகுவார்கள்.. ஆனால் சல்மான் கான் எப்போதும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என வெளிப்படையாக பேசக்கூடியவர், சிறந்த ஆளுமை கொண்டவர்.. அவர் அவராகவே இருக்கிறார். அவரைப்போல இப்படிப்பட்ட உயரத்தில் இருக்கும் ஒரு மனிதர் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமையான விஷயம்” என புகழ்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.