'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, ஆர்யா என சில நடிகர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் ஜெய்யும் இணைந்துள்ளார். பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக, நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். இந்த படத்தின் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஜெய்யின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனபோதிலும் ஸ்பாட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார் ஜெய். இந்த தகவலை ஜெய்யும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தவிர பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக,சிவ சிவ என மேலும் சில படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.