நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, ஆர்யா என சில நடிகர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் ஜெய்யும் இணைந்துள்ளார். பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக, நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். இந்த படத்தின் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஜெய்யின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனபோதிலும் ஸ்பாட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார் ஜெய். இந்த தகவலை ஜெய்யும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தவிர பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக,சிவ சிவ என மேலும் சில படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.