'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தற்போது ஹிந்தியில் குட்பை, மேடே, பிரமாஸ்திரா உள்பட பல படங்களில் நடித்து வரும் அமிதாப்பச்சன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடித்து வந்த அமிதாப்பச்சன் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஓரளவுக்கு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் பிறகு படமாக உள்ளது.
தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாம். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமிதாப்பச்சன், சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடித்தவர், நாக் அஸ்வின் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபாஸின் குருநாதர் வேடத்தில் நடிக்கிறாராம்.