மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படத்தை தன் மினி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருபவர் வினோத்குமார். அவரது முதல் தயாரிப்பான சமுத்திரக்கனி நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவான 'வெள்ளை யானை' இரண்டு வாரங்களுக்கு முன்பு டிவியில் நேரடியாக வெளியானது. அவர் இணைந்து தயாரித்துள்ள மற்றொரு படமான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'திட்டம் இரண்டு' நாளை மறுதினம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தனது டுவிட்டரில் அடிக்கடி அரசியல் கலந்த பதிவுகளையும் பதிவிடுபவர் வினோத்குமார். இன்று காலை அவரது டுவிட்டரில், “பின்னால் அசிங்கமாகப் பேசிவிட்டு, முன்னால் அன்பைப் பரப்புபவர்களை, மக்கள் வழிபடுகிறார்கள்,” என யாரையோ குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இன்று தனுஷ் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நாளில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர் பார் பிலிம்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர் தான் வினோத் குமார். தனுஷுடன் சண்டையிட்டுத்தான் அவரை விட்டு பிரிந்தார் என்பது கோலிவுட்டின் தகவல்.
ஆனால், இன்று தனுஷின் பிறந்தநாளுக்கு வினோத் எந்த வாழ்த்தும் சொல்லவில்லை. அதே சமயம், தனுஷின் 43வது படப் போஸ்டரை ரிடுவீட் செய்துவிட்டு அப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தையும் வினோத் தயாரித்து வருகிறார்.