பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கின் தீர்ப்பில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து விஜய் தரப்பில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மனு குறித்து நேற்று விசாரணை நடந்தபோது, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து இன்றும் அந்த சொகுசு காரின் வரி விலக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இந்த ஒரு லட்சம் அபராத தொகையை ஏன் நீங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அபராத தொகையை நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே கடந்தாண்டு விஜய் ரூ. 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக விஜய் வழங்கியிருக்கிறார் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.