தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கின் தீர்ப்பில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து விஜய் தரப்பில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மனு குறித்து நேற்று விசாரணை நடந்தபோது, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து இன்றும் அந்த சொகுசு காரின் வரி விலக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இந்த ஒரு லட்சம் அபராத தொகையை ஏன் நீங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அபராத தொகையை நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே கடந்தாண்டு விஜய் ரூ. 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக விஜய் வழங்கியிருக்கிறார் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.