'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கின் தீர்ப்பில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து விஜய் தரப்பில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மனு குறித்து நேற்று விசாரணை நடந்தபோது, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து இன்றும் அந்த சொகுசு காரின் வரி விலக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இந்த ஒரு லட்சம் அபராத தொகையை ஏன் நீங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அபராத தொகையை நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே கடந்தாண்டு விஜய் ரூ. 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக விஜய் வழங்கியிருக்கிறார் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.




