ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்க, இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அம்போவென விட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார்.
அதற்கான கதை விவாதம், மற்ற முன்பணி வேலைகள் ஆகியவற்றிற்காக தற்போது ஐதராபாத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் நாயகி யார் என்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
இதனிடையே, 'இந்தியன் 2' படம் போல தங்களது படமும் நீண்டு கொண்டே போய் சிக்கலில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண் ஆகியோர் ஷங்கரிடம் படத்தை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டார்களாம்.
ஷங்கரும் அதற்கு சம்மததித்து 2022ம் ஆண்டு கோடை விடுமுறைக்குள் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவேன் என்று உறுதியளித்துள்ளாராம். அதற்குப் பின் ஹிந்தியில் 'அந்நியன்' ரீமேக்கை அவர் இயக்க வேண்டும். அதில் நடிக்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் 2022 ஜுன் மாதத்தில் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதற்காகவும்தான் ஷங்கர் உறுதி கொடுத்துள்ளாராம்.
அப்படியென்றால் 'இந்தியன் 2' எப்போது வரும் என்று கேட்கிறீர்களா ?. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகுதான் தெரியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரது சண்டைகளுக்கு தீர்வு கண்டு தீர்த்து வைக்கும் கமல்ஹாசனாலேயே 'இந்தியன் 2' சண்டையை தீர்க்க முடியாமல் போனது அவரது ரசிகர்களுக்கும் பெரும் வருத்தம்தான்.




