மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

1990களில் கனவு கன்னியாக இருந்த குஷ்பு, சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த ஜாக்கெட்டும் பிரபலமானது. அதன்பிறகு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அரசியலுக்கு போனார், தி.மு.க, காங்கிரசில் இணைந்த அவர் தற்போது பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் குஷ்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.