'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மாயா, டோரா, ஐரா, நிழல்(மலையாளம்) உள்ளிட்ட த்ரில்லர் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தமின்றி தொடங்கி உள்ளது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். அவர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து விடவே மற்ற படங்களில் இருந்து தேதி வாங்கி இந்த படத்திற்கு தேதி கொடுத்திருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. 2வது கட்ட படப்பிடிப்பு கோவையை சுற்றி நடக்கிறது. மாயா படத்திற்கு இசை அமைத்த ரான் ஈதன் யோஹன் இதற்கு இசை அமைக்கிறார். தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார்.