கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மாயா, டோரா, ஐரா, நிழல்(மலையாளம்) உள்ளிட்ட த்ரில்லர் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தமின்றி தொடங்கி உள்ளது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். அவர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து விடவே மற்ற படங்களில் இருந்து தேதி வாங்கி இந்த படத்திற்கு தேதி கொடுத்திருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. 2வது கட்ட படப்பிடிப்பு கோவையை சுற்றி நடக்கிறது. மாயா படத்திற்கு இசை அமைத்த ரான் ஈதன் யோஹன் இதற்கு இசை அமைக்கிறார். தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார்.