காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முஸ்தபாவுக்கு ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கூறி அவர் பிரியமணியை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது ஆயிஷா, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. என் கணவர் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமணி தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: எனது கணவர் முஸ்தபாவும், நானும் நல்ல அன்புடன் இருக்கிறோம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். பேச முடியாவிட்டால் மெசேஜ் அனுப்பிக் கொள்கிறோம். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்கிறார் பிரியாமணி.




