பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா படத்தை இயக்குகிறார். இப்படம் ஆக்சன் படமாக உருவாகிறது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டர்களுடன், தற்போது ஆக்சன் படம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அழகிய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இருந்தாலும் தெலுங்கு டப்பிங் பட டைட்டில் போல இருப்பதாக சிலர் கமென்ட் அடித்து வந்தனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் டைட்டிலை சூர்யா தனது தந்தை சிவகுமாரிடம் இருந்தே பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.. ஆம் 1977ல் இதே பெயரில் வெளியான ஒரு படத்தில் கௌபாய் கேரக்டரில் நடித்துள்ளார் சிவகுமார். அந்தப்படத்தின் போஸ்டரும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.