அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா படத்தை இயக்குகிறார். இப்படம் ஆக்சன் படமாக உருவாகிறது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டர்களுடன், தற்போது ஆக்சன் படம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அழகிய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இருந்தாலும் தெலுங்கு டப்பிங் பட டைட்டில் போல இருப்பதாக சிலர் கமென்ட் அடித்து வந்தனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் டைட்டிலை சூர்யா தனது தந்தை சிவகுமாரிடம் இருந்தே பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.. ஆம் 1977ல் இதே பெயரில் வெளியான ஒரு படத்தில் கௌபாய் கேரக்டரில் நடித்துள்ளார் சிவகுமார். அந்தப்படத்தின் போஸ்டரும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.