அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் |
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ஒரே வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மதுபாலா, அதன் பிறகு தமிழை ஒதுக்கிவிட்டு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகள் இன்றி ஒதுங்கி இருந்தார். பின்னர் 2012ல் பாலாஜி மோகன் டைரக்ஷனில் உருவான வாயை மூடி பேசவும் என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த கொடுத்தார் மதுபாலா.
தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மதுபாலா. இந்தப்படத்தில் அருள்நிதியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகிறது.