டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மதுபாலா. அதன்பிறகு தனக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிய இவர் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சமீப வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி உள்ள மதுபாலா தற்போது வெளியாகி உள்ள ஸ்வீட் காரம் காபி என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ளார். லட்சுமி, மதுபாலா மற்றும் நிவேதிதா என மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
இதன் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மதுபாலா பேசும்போது, ரோஜா படத்திற்குப் பிறகு நடிப்பதற்கு வாய்ப்பு தரும் படங்கள் நிறைய தேடி வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது எல்லாம் ஆக்சன் படங்கள்.. அதில் நடனம் ஆடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறி நான் கண்ணீர் விட்டு அழுது உள்ளேன்.
தற்போது மீண்டும் திரும்பி நடிக்க வந்த நிலையில் ஹிந்தியில் இருந்து அஜய் தேவ்கனுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். கடந்த 1991ல் நானும் அஜய் தேவ்கனும் ஒரே படத்தின் மூலம் தான் ஜோடியாக அறிமுகமானோம். இப்போது அவருக்கே அம்மாவாக நடிக்க அழைத்தபோது கோபம் தான் ஏற்பட்டது.. நடிக்க முடியாது என மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி விட்டேன்” என்று கூறியுள்ளார் மதுபாலா.