என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ஒரே வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மதுபாலா, அதன் பிறகு தமிழை ஒதுக்கிவிட்டு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகள் இன்றி ஒதுங்கி இருந்தார். பின்னர் 2012ல் பாலாஜி மோகன் டைரக்ஷனில் உருவான வாயை மூடி பேசவும் என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த கொடுத்தார் மதுபாலா.
தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மதுபாலா. இந்தப்படத்தில் அருள்நிதியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகிறது.