குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி |

மலையாள நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாகவும் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உருவானார்கள். பின்னர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அமர்க்களம் படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின் நடிப்பை கைவிட்டார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நடிகர்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




