சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் |
சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிலையில் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மேலும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 169ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 170ஆவது படத்தை தனுசும் இயக்குவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்த படங்களோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப்போட திட்டமிட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் சொல்லும் பதில் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது நடிப்புக்கு முழுக்குப்போடும் எண்ணம் ரஜினியிடம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். அவரைப் பொறுத்த வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பார். அதிலும் தற்போது வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அதனால் இன்னும் இரண்டு படங்களோடு ரஜினி நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக வெளியான செய்தி உண்மையில்லை என்கிறார்கள்.