சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மணிரத்னம் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் உள்ளடங்கிய 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் ஒன்று. இதற்கு கிதார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைத்துள்ளார்கள். வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த குறும்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சூர்யா ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்தப்படத்தின் புகைப்படம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான கவுதம் மேனன் பட பாணியில் ரொமாண்டிக் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது, சூர்யாவை பிரயாகா மார்ட்டின் காதல் பொங்கும் பார்வையில் பார்க்கும்போதே தெரிகிறது.