திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மணிரத்னம் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் உள்ளடங்கிய 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் ஒன்று. இதற்கு கிதார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைத்துள்ளார்கள். வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த குறும்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சூர்யா ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்தப்படத்தின் புகைப்படம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான கவுதம் மேனன் பட பாணியில் ரொமாண்டிக் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது, சூர்யாவை பிரயாகா மார்ட்டின் காதல் பொங்கும் பார்வையில் பார்க்கும்போதே தெரிகிறது.