7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். தமிழாக தீபக் நடிக்கிறார். மீரா கிருஷ்ணன் - தமிழின் தாயாகவும் , ராமச்சந்திரன் - தமிழின் அப்பாவாகவும் நடிக்கிறார்கள், பிரபு - சரஸ்வதியின் அப்பாவாகவும், ரேகா - சரஸ்வதியின் அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தர்ஷனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சரஸ்வதி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண். ஆனால் சரஸ்வதிக்கு படிப்புதான் ஏறாது. பிளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் பாசாகாதவர். இதனால் அப்பாவின் அர்ச்சனையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
தமிழ் என்ற தமிழ்செல்வன் படிக்கும் ஆர்வம் கொண்டவர், ஆனால் அதற்கான வசதி இல்லாதாவர். இதனால் படிக்காத தன் மகனுக்கு படித்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கிறார் அவரது தாயார். இப்படி வெவ்வேறு துருவங்களான சரஸ்வதியும், தமிழும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தொடரின் கதை.
கொரோனா காலத்திலும் சுறுசுறுப்புடன் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகளால் 20 எபிசோட் வரை தயாராகி விட்டது என்கிறார்கள். வருகிற 12ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சேனல் அறிவித்துள்ளது.