குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். தமிழாக தீபக் நடிக்கிறார். மீரா கிருஷ்ணன் - தமிழின் தாயாகவும் , ராமச்சந்திரன் - தமிழின் அப்பாவாகவும் நடிக்கிறார்கள், பிரபு - சரஸ்வதியின் அப்பாவாகவும், ரேகா - சரஸ்வதியின் அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தர்ஷனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சரஸ்வதி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண். ஆனால் சரஸ்வதிக்கு படிப்புதான் ஏறாது. பிளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் பாசாகாதவர். இதனால் அப்பாவின் அர்ச்சனையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
தமிழ் என்ற தமிழ்செல்வன் படிக்கும் ஆர்வம் கொண்டவர், ஆனால் அதற்கான வசதி இல்லாதாவர். இதனால் படிக்காத தன் மகனுக்கு படித்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கிறார் அவரது தாயார். இப்படி வெவ்வேறு துருவங்களான சரஸ்வதியும், தமிழும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தொடரின் கதை.
கொரோனா காலத்திலும் சுறுசுறுப்புடன் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகளால் 20 எபிசோட் வரை தயாராகி விட்டது என்கிறார்கள். வருகிற 12ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சேனல் அறிவித்துள்ளது.