தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் தியேட்டர்களில் படம் வெளிவந்த 100 நாட்களுக்குள் புதிய படங்களை டிவியில் ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் அந்த எதிர்ப்பு காணாமல் போனது. தங்களது படங்களின் சாட்டிலைட் உரிமை டிவிக்களில் நல்ல விலைக்கு விற்காதா என தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் வந்தது.
கடந்த வருடம் கொரோனா முதல் அலை காரணமாக ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியானது. அதற்கு ஒரு படி மேலே, புதிய படங்களை நேரடியாக டிவிக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த விதத்தில் கடந்த வருட தீபாவளிக்கு பிரசன்னா, ஷாம், யோகி பாபு நடித்த 'நாங்க ரொம்ப பிஸி' படத்தை டிவியில் நேரடியாக வெளியிட்டார்கள்.
அதற்குப் பிறகு இந்த வருடத்தில், “புலிக்குத்தி பாண்டி, ஏலே, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளே” ஆகிய படங்களை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிவிக்களில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்ததாக 'வெள்ளை யானை' படம் வரும் ஜுலை 11ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒரு முன்னணி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டிவியில் நேரடியாக வெளியாகும் 8வது படம் இது.
கொரோனா அலை காரணமாகத்தான் கடந்த வருடம் முதல் டிவியில் படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஆனால், முதன் முதலாக 2008ம் ஆண்டு சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து தேசிய விருது பெற்ற 'ஆடும் கூத்து' படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது.