சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்குகளுக்கான தளர்வுகள் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த வாரத்திற்கான தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதிலும் தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தியேட்டர்காரர்களுக்கும், திரையுலகினருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஜுலை 15 முதல் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அடுத்த வார ஊரடங்கு தளர்வு தான் தமிழகம் முழுமைக்குமான ஒரே மாதிரியான தளர்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் அவற்றிற்கு வரும் வாரம்தான் குறிப்பிடத்தக்க தளர்வுகள் கிடைக்க உள்ளன. இப்படி மாவட்டத்திற்கு மாவட்டம் கொரோனா தாக்கத்தில் மாறுபாடு இருப்பதால்தான் தியேட்டர்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
பேருந்து, கடைகள் உள்ளிட்டவை மக்களுக்கான அவசியத் தேவைகளாக உள்ளன. சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாகத்தான் இருக்கிறது. மேலும், திருமணம், இறுதி ஊர்வலம் ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் அப்படியே தான் உள்ளது. மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தொடர்ந்து தவிர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது.
எனவே, இந்த ஜுலை மாதத்திலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து வேண்டுமானால் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள்.