இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
தமிழைப் போலவே தெலுங்கிலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 2017ல் ஒளிபரப்பான முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், 2018ல் ஒளிபரப்பான இரண்டாவது சீசனை நானி, 2019 மற்றும் 2020ல் ஒளிபரப்பான மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டி தொகுத்து வழங்கலாமென தகவல் வெளியாகியுள்ளது. ராணா, இதற்கு முன்பு 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர். மேலும், 'பாகுபலி' புகழும் அவருக்கு உள்ளதால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறார்களாம்.
தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். விரைவிலேயே 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
தமிழில் கூட கமல்ஹாசன் இந்த வருடத்துடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு விலகப் போவதாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.