இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அந்த படத்தின் வெற்றியை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், முருகதாஸிற்கு அடுத்த படம் கிடைப்பதிலும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. பெரிய நடிகர்களை வைத்தே இயக்கி பழக்கப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தனது நட்பு கூட்டணியில் உள்ள விஜய்யை வைத்து படம் இயக்கும் எண்ணத்துடன், அவரிடம் ஒரு கதையை கூறினார். ஆனால் அந்த கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் அதை நிராகரித்து விட்டார்.
இந்தநிலையில் தற்போது அதே கதையை நடிகர் கமலை வைத்து முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன. ஒரு காலத்தில் திரையுலகில் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர். இதில் இன்னும் கமலை மட்டும் வைத்து படம் இயக்காமல் உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதேசமயம் தற்போதைய இளம் நடிகர்களில் மும்மூர்த்திகளாக கருதப்படும் விஜய், அஜித், சூர்யா மூவரது படங்களையும் இயக்கிவிட்ட முருகதாஸுக்கு கமல் படத்தையும் இயகிவிட்டால் அவரது மனக்குறையும் தீர்ந்துவிடும்.. அவரது திரையுலக பயணமும் முழுமை அடைந்தது போல் ஆகிவிடும்.. ஆனால் கமல் கைவசம் உள்ள படங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாமதமாகி வருவதால், கமல்-முருகதாஸ் கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.