'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தெலுங்கில் 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்தார். அப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் வெற்றியும், அதற்கு முன்பு விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'மாஸ்டர்' படத்தின் வெற்றியும் விஜய் சேதுபதிக்கும் தெலுங்கில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
அதனால், தெலுங்கு இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தங்களது படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்டார்.
அடுத்து 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்க உள்ள படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் வில்லன் நடிகர்களுக்கு நிறையவே பஞ்சம் உள்ளது. அதே சமயம், வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைக்கும் போது அந்தப் படங்களை பான்-இந்தியா வெளியீடாக வெளியிடும் போது அது உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறார்களாம்.
அதே சமயம் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதை தமிழ் இயக்குனர்கள் விரும்பவில்லை என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதனால், அவரை நாயகனாக வைத்து தமிழில் படமெடுக்கும் போது அது கர்நாடகா, கேரளா மாநில வியாபாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.