துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இந்தியாவில் திரையிடப்படும் திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைத் துறை தணிக்கை செய்து அவற்றிற்கு யு, யு-ஏ, ஏ என சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல் அமைப்பை மத்திய அரசு கலைத்துவிட்டது.
மேலும், யு-ஏ சான்றிதழ் எனப்படுவது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர் வழிநடத்தலில் பார்க்கலாம் என்பதாக இருந்தது. அதில் இனிமேல், “யு-ஏ 7 +, யு-ஏ 13+, யு-ஏ 16+” என மூன்று மாற்றங்களைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
டிரிப்யூனல் கலைக்கப்பட்டதற்கு திரைப்படத் துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய திருத்தங்கள் அமலாகும் போது அது குறித்து மேலும் கருத்துக்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.