'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிரித்விராஜ், பிஜூமேனன் நடித்திருந்த இந்தப்படத்தை கதாசிரியரும் இயக்குனருமான சாச்சி இயக்கியிருந்தார். அந்த படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் சாச்சி. இது மலையாள திரையுலகிற்கு பேரதிர்ச்சியை தந்தது. அவர் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவரது மனைவி சிஜி, சாச்சியின் நினைவுகளை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் சாச்சி இறங்கியிருந்தார் என்கிற தகவலை கூறியுள்ளார் சிஜி.
அய்யப்பனும் கோஷியும் படம் வெளியான பின்பு, அதை பார்த்துவிட்டு சாச்சியை தொடர்பு கொண்ட அஜித், அவரை ரொம்பவே பாராட்டினாராம். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம், அதற்கான கதையை தயார் செய்யுங்கள் என்று சாச்சியிடம் கேட்டுக்கொண்டாராம் அஜித். தனுஷ்கோடியை மையப்படுத்திய கதை ஒன்றை, அஜித்தை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்க வேண்டும் என்பதை தனது கனவு படமாகவே நினைத்திருந்தாராம் சாச்சி. மாரடைப்புக்கு முன்னதாக, சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாச்சி, அதற்கு பின் வந்த நாட்களில், அஜித்தை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சந்திப்பு நிகழாமலேயே அவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என வருத்தத்துடன் கூறியுள்ளார் சாச்சியின் மனைவி சிஜி.