பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் நட்சத்திரங்கள் மட்டும் கோலோச்சும் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் கிஷோர்.. பொல்லாதவன், கபாலி ஒருபக்கம் வில்லனாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஹரிதாஸ், றெக்க போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் கிஷோர், ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர்.. இந்த்நிலையில் அவர் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'ஆஹானி' என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.