கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிப்பார். அப்படி தெலுங்கில் 2012ம் ஆண்டு அவர் நடிக்க ஆரம்பித்த படம் 'ஆறடுகுலா புல்லட்'. இதில் நாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார்.
இப்படத்தை முதலில் தமிழ் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி.கோபால் படத்தை இயக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து, 2017ல் இப்படத்திற்கான சென்சார் முடிந்தும் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
நயன்தாரா நடித்த ஒரு படம் இத்தனை வருடங்கள் தாமதமாக வெளிவந்ததே இல்லை. தற்போதைக்கு தமிழில் மட்டுமே படங்களில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறாராம்.