சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிப்பார். அப்படி தெலுங்கில் 2012ம் ஆண்டு அவர் நடிக்க ஆரம்பித்த படம் 'ஆறடுகுலா புல்லட்'. இதில் நாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார்.
இப்படத்தை முதலில் தமிழ் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி.கோபால் படத்தை இயக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து, 2017ல் இப்படத்திற்கான சென்சார் முடிந்தும் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
நயன்தாரா நடித்த ஒரு படம் இத்தனை வருடங்கள் தாமதமாக வெளிவந்ததே இல்லை. தற்போதைக்கு தமிழில் மட்டுமே படங்களில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறாராம்.
 
           
             
           
             
           
             
           
            