'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம். இருவரும் முன்பெல்லாம் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார் விக்னேஷ் சிவன். அவற்றைப் பார்த்து பலர் பொறாமை கமெண்ட்டுகளையும், வாழ்த்து கமெண்ட்டுகளையும் அள்ளித் தெளிப்பார்கள்.
சமீபகாலமாக இந்த காதல் ஜோடி தனி விமானத்தில் பறப்பதைக் கூட புகைப்படம் எடுத்து அவற்றை மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கொரோனா காலத்தில் லட்சங்களில் செலவு செய்து இந்த தனி விமானப் பயணம் தேவையா என்ற சர்ச்சை கூட வந்தது.
நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது” எனக் கேட்டிருந்தார். அந்த புகைப்படத்தைத்தான் இந்த செய்தியின் இணைப்புப் புகைப்படமாகப் பார்க்கிறீர்கள்.
மற்றொரு ரசிகர் நயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்தது எது ?, என்று கேட்டதற்கு 'அவருடைய தன்னம்பிக்கை' என பதிலளிக்கிறார்.
லிவிங்-டு-கெதர் ஆக இருக்கும் இந்த காதல் ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறது என பலரும் கேட்டுவிட்டார்கள். ஆனாலும், இருவருமே அது பற்றி அமைதியாகவே இருக்கிறார்கள்.