ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

தமிழ்த் திரைப்பட இயக்குனரான லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆசை தான். மீண்டும் அந்த மாஜிக்கை உருவாக்கவும் ஆசை, ஏனென்றால் அவர் அற்புதமான அன்பான மனிதர். நாங்கள் இருவரும் தெலுங்குப் படத்தில் இணைகிறோம், அதில் நான் வில்லனாக நடிக்கிறேன் என சமீபமாக உலவி வரும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாதவனுக்கு தான் இயக்கிய 'ரன்' படம் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜைக் கொடுத்தவர் லிங்குசாமி. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு வரை சாக்லேட் பாய் இமேஜில் இருந்தவர் மாதவன். அடுத்து 'வேட்டை' படத்திலும் லிங்குசாமி, மாதவன் மீண்டும் இணைந்தனர்.
மாதவன் தற்போது 'ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்' என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.




