இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சந்தானம், சூரி ஆகியோர் கொடுத்த இடைவெளியால், உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர், சில படங்களில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்.
ரசிகர் ஒருவர் யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு 'ஆமாம்ப்பா' என பதிலளித்து இதை உறுதி செய்துள்ளார் யோகிபாபு. நெல்சன் திலீப்குமாரின் முதல்படமான கோலமாவு கோகிலாவில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்தார் என்பதும், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் நான்காவது முறையாக இவர் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.