'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலகட்டத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் களுக்கு செல்ல உதவி செய்தவர் பாலிவுட் நடிகர் சோனுசூட். அதேபோல் இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின்போதும் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் ஆக்சிஜன் பேங்க் ஒன்றை தொடங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இதையடுத்து சோனுசூட் அளித்துள்ள ஒரு பேட்டியில், சிரஞ்சீவி - ராம்சரண் ஆகிய இருவரும் ஆக்சிஜன் வங்கி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருவதாக அறிந்தேன். இது ஒரு பாராட்டத்தக்க செயல். இதற்காக அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி-ராம்சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் சோனுசூட்டும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.